ஆளுநர்

பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்;ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்டநடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறு பணித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இதனை நாளையிலிருந்தே ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 11.06.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. ஆளுநர் தனது ஆரம்ப உரையில், அலுவலர்களை களத்துக்குச் சென்று பணியாற்றுமாறு திரும்பத் திரும்பக் கூறிவருகின்றபோதும் […]

பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

பசுந்தேசம் அமைப்பும், இயற்கை நண்பர்கள் இயக்கமும் இணைந்து நடத்திய சர்வதேச சுற்றுச்சூழல் நாள் நிகழ்வு

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது சுற்றுச் சூழலைக் கவனத்திலெடுக்காமல் செயற்படமுடியாது. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்தே அதனைச் செயற்படுத்தவேண்டும். இதன்மூலமே எதிர்கால சந்தத்திக்கு வளமான சுற்றாடலைக் கையளிக்கமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பசுந்தேசம் அமைப்பும், இயற்கை நண்பர்கள் இயக்கமும் இணைந்து நடத்திய சர்வதேச சுற்றுச்சூழல் நாள் நிகழ்வு கைதடி சிறுவர் பூங்காவில் 10.06.2025 இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தனது உரையில்,

பசுந்தேசம் அமைப்பும், இயற்கை நண்பர்கள் இயக்கமும் இணைந்து நடத்திய சர்வதேச சுற்றுச்சூழல் நாள் நிகழ்வு Read More »

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை சிறுவர் சட்டங்களினூடான வழிகாட்டுதலின் கீழ் சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல் கலந்துரையாடல்

பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அவற்றை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என்றும் கடந்த காலங்களில் மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய போது அவ்வாறான முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது பாடசாலை சமூகங்களின் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டியிருந்தது எனவும் தெரிவித்தார். சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை சிறுவர் சட்டங்களினூடான வழிகாட்டுதலின் கீழ் சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் இணைந்து செயற்படுதல் தொடர்பான

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை சிறுவர் சட்டங்களினூடான வழிகாட்டுதலின் கீழ் சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல் கலந்துரையாடல் Read More »

‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். ‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் 07.06.2025 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார். ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு.

‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது. Read More »

சுன்னாகம் பட்டினத்தின் சிற்பியும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வு

எமது மக்களுக்கு வேறு விடயங்கள் இருந்தாலும் அபிவிருத்தி முக்கியம். அதனை உணர்ந்து அன்றே செயற்பட்டவர்தான் செனட்டர் பொ.நாகலிங்கம். அதனால்தான் அவரால் சுன்னாகம் பொதுச்சந்தை மற்றும் சுன்னாகம் பொது நூலகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய முடிந்தது. இப்போதும் எமது மக்களுக்கு அபிவிருத்தி முக்கியம் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுன்னாகம் பட்டினத்தின் சிற்பியும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும், சுன்னாகம் பிரதேச

சுன்னாகம் பட்டினத்தின் சிற்பியும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வு Read More »

வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்’ வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

போர் முடிந்த கையோடு பல அமைப்புக்கள் – நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தாலும் தற்போது நிலைமை அவ்வாறில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வன்னி வாழ் மக்களுக்கான மனிதநேய நம்பிக்கை நிதியம், மெத்தா புனர்வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ‘வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்’ வடக்கு மாகாண ஆளுநரால் 06.06.2025 அன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி திருமதி நளாயினி இன்பராஜ்

வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்’ வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது Read More »

நூலகம் நிறுவனமும், யாழ்ப்பாணம் பொதுநூலகமும் எண்ணிமப்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்) செயற்றிட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல்

நூலகம் நிறுவனமும், யாழ்ப்பாணம் பொதுநூலகமும் எண்ணிமப்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்) செயற்றிட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 05.06.2025 அன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது நூலக நிறுவனம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்தை இணைந்து செயற்படுத்துவதன் ஊடாக கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆலோசனைக்

நூலகம் நிறுவனமும், யாழ்ப்பாணம் பொதுநூலகமும் எண்ணிமப்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்) செயற்றிட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல் Read More »

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தின் செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தின் செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 05.06.2025 அன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் நடைபெற்றிருந்தபோதும், செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த சில சவால்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆளணி வளம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தின் செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், இந்த மாத இறுதிக்குள் கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (05.06.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »

உலக வை.எம்.சி.ஏ கொடி வாரத்தினை முன்னிட்டு யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

உலக வை.எம்.சி.ஏ. வாரம் கடந்த 1ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் அதனை முன்னிட்டு நடத்தப்படும் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு 04.06.2025 அன்று புதன் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.  

உலக வை.எம்.சி.ஏ கொடி வாரத்தினை முன்னிட்டு யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. Read More »