ஆளுநர்

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் இன்று (15/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், […]

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் Read More »

மங்களம் பொங்கும் தமிழ் – சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்

தமிழ் மக்களின் பாரம்பரியம், தொன்மை என்பவற்றுக்கு அமைய சித்திரை 14 ஆம் நாள் புது வருடம் பிறக்கிறது. அதற்கமைய இந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி குரோதி எனும் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புது வருடத்தில் சாந்தியும், சமாதானமும் மேலோங்கி வறுமைகள் நீங்கி எல்லா வளங்களுடனும் அனைவரும் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இதேதினத்தில் சிங்கள மக்களும் தங்களின் புதுவருடப் பிறப்பை கொண்டாடுகின்றனர். பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய

மங்களம் பொங்கும் தமிழ் – சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள் Read More »

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள்.

சுமார் ஒருமாத காலமாக பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு நோற்ற இஸ்லாமிய சகோதரர்கள், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டதும், ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒரு கடமையாகும். இந்தக் காலப்பகுதியில் வெறுமனே பசித்திருந்து, தாகித்திருப்பது மாத்திரமின்றி, இறையச்சத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொள்வதே நோன்பின் முக்கிய கடற்பாடாகும். புனித நோன்பு காலப்பகுதியில் ஏழைகளுக்கு உதவுதல்,

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்கவெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டு பெருவிழா நேற்று (06/04/2024) நடைபெற்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்வாக ரீதியாகவும், மக்களின் தேவைகள் தொடர்பாகவும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில்  அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுவதாக

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்கவெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான   சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (06/04/2024) விசேட நிகழ்வும், கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கௌரவ அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, 2030 ஆம் ஆண்டுக்கு

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் மீது தண்டனை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்படுகிறது. கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களை வளப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, மாணவர்களை அடித்து, துன்புறுத்தி வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்குள் இவ்வாறாக செயற்பட்ட ஆசிரியர்கள் தொடர்பில், ஆளுநரின் செயலகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று பதிவாகிய மூன்று சம்பவங்கள்

ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அறிவிப்பு Read More »

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களை நேரில் சந்தித்து தெளிவுப்படுத்துவது அவசியமானதொன்று என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலவச வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பிரதிதிநிகளுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று  (03/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே கௌரவ ஆளுநர் இதனை தெரிவித்தார். சூரிய படலங்கள் பொருத்தப்பட்ட கூரைகளுடன் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது தற்போது சற்று மாற்றப்பட்டு, கூரைகளில் சூரிய படலங்கள் அற்ற வகையில் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாண இப்தார் நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்துசிறப்பித்தார்

ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று மாலை (02/04/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றினார். “விரதம் என்பது மனதை வழிப்படுத்துகின்ற ஒரு விடயமாக மாத்திரமன்றி உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான விடயமாக மருத்துவ ஆராய்ச்சிகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் மதத்திற்காக ஒருவர் தன்னை தயார்ப்படுத்தும் அதேசந்தர்ப்பத்தில் மனதை தூய்மைப்படுத்துவதோடு உடலையும் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு நுட்பமாக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சமயங்களுமே

வடக்கு மாகாண இப்தார் நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்துசிறப்பித்தார் Read More »

கண் சுகாதாரம்தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை நாளை (03) ஆரம்பம்

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (03) ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை, வலயக் கல்வி பணிமனைகளூடாக நாளை முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளன. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் ஊடாக பாடசாலைகளில் மாணவர்களின் பார்வை திறன் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், உரிய மாணவர்கள் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கு

கண் சுகாதாரம்தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை நாளை (03) ஆரம்பம் Read More »

கௌரவ ஆளுநரின் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்

“அவர் இறந்தார். பாவத்தை ஒழிக்க ஒரேயொருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்”  –  உரோ. 6 : 10 மானிட குலத்தை மீட்பதற்காக மனித உருவெடுத்துவந்த இறைமகன் கிறிஸ்து, மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இந்த உன்னதமான நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினமாக கொண்டாடுகின்றனர். “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்தவரானார்” என்ற திருவிவிலிய வாக்கியத்திற்கு அமைய, அடிமைத்தன  ஆதிக்கம் செலுத்திய காலத்தில் மீட்பு, சமாதானம், சமத்துவம், அன்பு, நட்புறவு என அனைத்தையும்

கௌரவ ஆளுநரின் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் Read More »