ஆளுநர்

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும்,வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (01.03.2024) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய முதலீடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வது […]

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும்,வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் மற்றுமொரு சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு அச்சுவேலியில் நடைபெற்றது

வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் கௌரவ ஆளுநரின் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பின் மற்றுமொரு கட்டம் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று (29.02.2024) நடைபெற்றது. கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் அச்சுவேலி சென்தேரேசா மகளிர் கல்லூரியில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது, அச்சுவேலி பகுதியை சேர்ந்த பல சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். வீதி சீரின்மை, பொது போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படாமை, நூலக வசதியின்மை, வெள்ள அபாயம் உள்ளிட்ட

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் மற்றுமொரு சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு அச்சுவேலியில் நடைபெற்றது Read More »

பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அழைப்பு

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பியோ ஸ்மித், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகங்கள் மீது கவனம் செலுத்தி பாலியல் மற்றும் குடும்பதிட்ட ஆரோக்கியம், பெண்களுக்கான  உரிமைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில்

பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அழைப்பு Read More »

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல. பொதுமக்களின் சேவகர்கள் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மீண்டும் வலியுறுத்தல்.

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் இன்று (01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன,  உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள்

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல. பொதுமக்களின் சேவகர்கள் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மீண்டும் வலியுறுத்தல். Read More »

யாழ். புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்

யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் ஐவரடங்கிய குழு இன்று (01.03.2024) நியமிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்  உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம் நேற்று (29.02.2024) நடைபெற்ற கூட்டத்தில், பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய தீர்வுகளை வழங்குவதற்கு குழு நியமிக்கப்படும்

யாழ். புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு நியமனம் Read More »

தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின்கோரிக்கைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்கான குழு இன்று நியமிக்கப்படும்

யாழ்ப்பாணத்திலிருந்து தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்  உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான குழு இன்று (01.03.2024) நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானத்தை கௌரவ ஆளுநர் அறிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இந்த விசேட

தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின்கோரிக்கைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்கான குழு இன்று நியமிக்கப்படும் Read More »

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் உறுதி

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (28.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் இதன்போது இந்திய துணைத் தூதுவருக்கு தெளிவுப்படுத்தினார். அதற்கமைய, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும்

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் உறுதி Read More »

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை Read More »

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில்மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவஆளுநர் பணிப்புரை

யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவன் ஆகியோரிடம்

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில்மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவஆளுநர் பணிப்புரை Read More »

இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி இன்றியமையாத தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ், சீருடை வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஆறு மாத NVQ சான்றிதழ் மற்றும் மூன்று வருடங்களுக்கான தாதியர் பயிற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்கள் கௌரவ ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது. இளைஞர், யுவதிகளுக்கு தற்போது தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும். கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரம்

இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி இன்றியமையாத தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »