கல்வி அமைச்சு

புதிய கல்விக்கொள்கை பற்றி கருத்தறியும் ”டிஜிடல் தளம்” ஆரம்பம்

கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து ”பேண்தகு கல்விக் கொள்கைச் சட்டகமொன்றை” உருவாக்குவதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ”டிஜிடல் தளம்” ஒன்று ”அறிவையும் மனதையும் போஷிக்கும் முழுமையான கல்வியை நோக்கி” என்னும் கருப்பொருளுடன் உத்தியோகபூர்வமாக 26 மார்ச் 2021 அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 03 மாதங்கள் www.egenuma.moe.gov.lk எனும் இணையதளம் மூலம் மக்கள் புதிய கல்வி மறுசீரமைப்பிற்கான கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அனுப்பிவைக்க முடியும். முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் […]

புதிய கல்விக்கொள்கை பற்றி கருத்தறியும் ”டிஜிடல் தளம்” ஆரம்பம் Read More »

கௌரவ ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2020 (2021 மார்ச்) மாணவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் தனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். கொவிட் – 19 தாக்கம் காரணமாக சுமார் ஒரு வருட காலமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் தமது பரீட்சைக்கான தயார்ப்படுத்தலை பாடசாலைகளிலும், சூம் செயலி (Zoom) ஊடாக நிகழ்நிலையிலும் தயார்ப்படுத்தியது மட்டுமல்லாது வீடுகளில் இருந்த காலத்தில் சுயகற்றலை மேற்கொண்டு தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள். அவர்களது கடின முயற்சிக்கான பலனை அடைவதற்கான ஓர்

கௌரவ ஆளுநரின் வாழ்த்துச் செய்தி Read More »

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நூல் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் ,ளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பாசையூர் அண்ணாவியார் முடியப்பு அருட்பிரகாசம் அவர்களின் இரு கூத்துக்கள், கூத்திசை நாடகம், இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் மற்றும் சிலம்பரசி நாட்டுக்கூத்துக்கள் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா பாசையூர் புனித அந்தோனியார் பங்கு மண்டபத்தில் 14 பெப்பிரவரி 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் மாவட்ட பதில் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.மா.அருட்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நூல் வெளியீடு Read More »

வட மாகாண கலாச்சார திணைக்களத்தினால் மன்னாரில் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டன

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் புனித அந்தோனியார் நாடகம், புனித செபஸ்தியார் வாசகப்பா, மன்னார் மாதோட்டத் தமிழ் புலவர் சரித்திரம் ஆகிய மூன்று நூல்களின்; வெளியீட்டு விழா மாந்தை வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் 20.12.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இமானுவேல்

வட மாகாண கலாச்சார திணைக்களத்தினால் மன்னாரில் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டன Read More »

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் கலை மற்றும் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உதவுத் தொகை வழங்கல் நிகழ்வு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கலைஞர்களுக்கு உதவுதொகை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் 06 ஒக்டோபர் 2020 அன்று கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள் சிறப்பு

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் கலை மற்றும் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உதவுத் தொகை வழங்கல் நிகழ்வு Read More »

மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் (பாகம்-1) இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் 29 பெப்பிரவரி 2020 சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இமானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களும், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் கலை,

மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு Read More »

வட மாகாண கல்வி அமைச்சின் 2020 ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல்

கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தலுக்கான நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாகாணக் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண வலயக் கல்வி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளரினால் தேசியகொடி ஏற்றிவைக்கப்பட்டதோடு யாழ். வலயக் கல்வி உத்தியோகத்தர்களினால் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து

வட மாகாண கல்வி அமைச்சின் 2020 ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் Read More »

கங்கண சூரிய கிரகணம் அவதானிக்கும் நிகழ்வு

2019.12.26ம் திகதி காலை 07:00 மணி முதல் யா/கட்டைக்காடு றோ.க.த.க. பாடசாலையில் கங்கண சூரிய கிரகணம் அவதானிக்கும் நிகழ்வு கொ/நாலந்தா கல்லூரியின் வானியல் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 200 பாடசாலை மாணவர்கள் உட்பட வடமாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், கொ/நாலந்தா கல்லூரியின் வானியல் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் இராணுவத்தினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பயன்பெற்றனர்.

கங்கண சூரிய கிரகணம் அவதானிக்கும் நிகழ்வு Read More »

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழாவானது திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் 30 டிசெம்பர் 2019 அன்று மாலை மூன்ற மணிக்கு யாழ் சென் பெனடிக்ற் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் அருட்தந்தை ஜெறோம் செல்வநாயகம் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகவும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திர.ஜோன் குயின்ரஸ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள். கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ உதவிப்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா Read More »

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டம் – 26 ஆகஸ்ட் 2019

யாழ் மாவட்டத்தின் நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது கட்டத்தின் கீழ் கல்வித்துறையின் நடமாடும் சேவை எதிர்வரும் 26.08.2019 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை செம்மணி வீதி நல்லூரில் அமைந்துள்ள மாகாணக் கல்வி அமைச்சில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டம் – 26 ஆகஸ்ட் 2019 Read More »