npc2018z

புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் மற்றும்வடக்கு மாகாண அலுவலகங்களில் நிலவும்தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் வேலைமேற்பார்வையாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு கௌரவஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின்தலைமையில் 26 ஜனவரி 2019 அன்று  யாழ் வேம்படிபெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது. இதனடிப்படையில் 249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களும்  33 தொழில்நுட்டஉத்தியோகத்தர்களுக்கான நியமன கடிதங்களும் 10 வேலைமேற்பார்வையாளர்களுக்கான நியமனக் கடிதங்களும்  வழங்கி வைக்கப்பட்டது. ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன்,  வடக்கு மாகாண பிரதம செயலாளர்ஏ.பத்திநாதன்,  மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மாகாணகல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட பெருமளவானோர் இந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இடம்பெற்றது

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் தினம் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இன்று (23) வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இடம்பெற்றது. இந்த பொதுமக்கள் சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆளுநருடன் பிரசன்னமாகி பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து தேவையான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். இரணைமடுகுள கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகளையும் ஆளுநர் சந்தித்தார் இதற்கிடையில் கிளிநொச்சி இரணைமடுக்குள கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகள் கௌரவ

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இடம்பெற்றது Read More »

பிரித்தானியான அரசாங்கத்தின் இராஜதந்திரி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்

பிரித்தானியான அரசாங்கத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரியும் இந்திய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான திரு.பேர்கஸ்  ஓல்ட் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 23 ஜனவரி 2019 அன்று முற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் சந்தித்தார்.

பிரித்தானியான அரசாங்கத்தின் இராஜதந்திரி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார் Read More »

வடக்கில் இராணுவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு

வவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும்  இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில்22 ஜனவரி 2019 அன்று  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய அவர்கள் காணிவிடுவிப்பிற்கான பத்திரத்தை கௌரவ

வடக்கில் இராணுவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு Read More »

மகளிர் விவகார அமைச்சினால் மெழுகுவர்த்தி உற்பத்திற்கான வாழ்வாதார உதவி

மெழுகுதிரி உற்பத்தியில் 04 பேர் கொண்ட குழுவாக ஈடுபடும் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு 2018ம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதியூட்டத்தினூடாக உற்பத்தியினை விஸ்தரிப்பதற்கான உற்பத்தி உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான நிதி ஆகிய உதவிகள் வடமாகாணம், மகளிர் விவகார அமைச்சினூடாக அண்மையில் வழங்கப்பட்டது. அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களினால் வேலணை கிழக்கு, 1ம் வட்டாரத்தில் சாட்டி கிராமத்தில் அமைந்துள்ள ‘யோசப் மெழுகுதிரிகள்’ உற்பத்தி செய்யும் குறித்த மகளிர்

மகளிர் விவகார அமைச்சினால் மெழுகுவர்த்தி உற்பத்திற்கான வாழ்வாதார உதவி Read More »

2019 ஆம் ஆண்டின் அரச முதியோர் இல்லத்தின் நிகழ்வுகள்.

புத்தாண்டு தினத்தன்று ஆரோக்கிய விநாயகர் சமேத நிற்சிங்க வைரவர் ஆலயத்தில் விசேட பூசைகளும் தேசியக் கொடியேற்றலுடனான சத்தியப்பிரமாண நிகழ்வுகளும் மூத்தோர்கள், உத்தியோகத்தர்களால் இணைந்து செயற்படுத்தப்பட்டது. இத் தினத்தில் உள மேம்பாட்டிற்காகவும், மகிழ்வான எதிர்காலத்தை நோக்கியதான விழிப்புணர்விற்காகவும் நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டன. தைப்பொங்கல் தினத்தன்று விசேட ஆராதனைகளும் தியான நிகழ்வுகளும் இல்லச் சூழலில் ஒழுங்குபடுத்தப்பட்டு, வடிவமைக்கப்பட்டு சமூக நிறுவனங்களின் ஒன்றிணைவுடனும் தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மூத்தோர்களின் பங்குபற்றுதலுடனான பொங்கல் நிழ்வும் செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டின் அரச முதியோர் இல்லத்தின் நிகழ்வுகள். Read More »

வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் லோட்டஸ் தொழில் முயற்சியாளர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது

சமூக மட்ட அமைப்புக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தில் வாழைநார் சார் உற்பத்தியில் ஈடுபடும் கன்னட்டி வெங்கலச்செட்டிக்குளத்தினைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுக்களாக ஈடுபடும் லோட்டஸ் தொழில் முயற்சியாயர்ளுக்கு 2018ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியினூடாக (PSDG)ரூபா 445,000.00 பெறுமதியான வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் எமது அமைச்சினூடாக வழங்கப்பட்டது.

வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் லோட்டஸ் தொழில் முயற்சியாளர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – யாழ்ப்பாணம்

பெண் தலைமைத்துவக்  குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக  நிகழ்வானது 2018.12.12 ஆம் திகதி  அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் மகளிர் விவகார அமைச்சு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, நல்லூர் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த  ஐந்து பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமையல் உபகரணங்கள் மின்சார நீர் இறைக்கும் மின் மோட்டர், தையல் இயந்திரங்கள்  மற்றும்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – யாழ்ப்பாணம் Read More »

ஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 22 ஜனவரி 2019  அன்று முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் காணிகள் மற்றும் நீர்வளங்கள் தொடர்பாகவும் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆரயப்பட்டதுடன் இம்மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டுமுதல் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் முழுமையான விபரங்கள், அவற்றில் மீள்குடியேறிய

ஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு Read More »

ஆளுநர் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்

யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசல் மற்றும் யாழ் நகரப் பள்ளிவாசல்களுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 19 ஜனவரி 2019 அன்று  அவர்கள் விஜயம் செய்தார்.

ஆளுநர் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் Read More »