npc2018z

வட மாகாண கல்வி அமைச்சின் நவராத்திரி விழா– 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம், கல்வித் திணைக்களத்தின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக் கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பவற்றுடன் இணைந்து நடாத்திய வட மாகாண நவராத்திரி விழா 2022.10.05 (புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் கல்வி அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலை முன்றலில் நடைபெற்றது. ஆலய வழிபாட்டோடு நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து யாழ். வலயக்கல்வி பணிப்பாளர் திரு.மு.ராதாகிரு~;ணன் அவர்களால் […]

வட மாகாண கல்வி அமைச்சின் நவராத்திரி விழா– 2022 Read More »

தியானப்பயிற்சி அறிவுப்பகிர்வு நிகழ்வு – சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு மாகாணம்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தொடர் அறிவுப் பகிர்வு நிகழ்வின் முதற்கட்டமாக தியானப்பயிற்சியானது கடந்த 11.10.2022 ம் திகதி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியானது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவின் சமூக மருத்துவர் அவர்களினால் செய்முறை விளக்கங்களுடன் ஏறத்தாழ 30 உத்தியோகத்தர்களின் முனைப்பான பங்களிப்புடன் நடாத்தப்பட்டது.

தியானப்பயிற்சி அறிவுப்பகிர்வு நிகழ்வு – சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு மாகாணம் Read More »

யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு – 2021

வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக, யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாண வலயத்துக்குரிய மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 10.10.2022 அன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களும் ஏனைய அதிதிகளாக யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப்

யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு – 2021 Read More »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழா மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழாவும் மற்றும் றோட்டறிக் கழகத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடத்துக்கான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் 10.10.2022 அன்று திங்கட்கிழமை ஆதார வைத்தியசாலை வைத்தியர் அத்தியட்சகர் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.பந்துலசேன அவர்களும் ஏனைய அதிதிகளாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், தென்மராட்சி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழா மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் Read More »

மருத்துவமுகாம் சுதந்திரபுரம் – உடையார்கட்டு

விவசாய திணைக்களத்தினால் கடந்த 06.10.2022 அன்று சுதந்திரபுரம் – உடையார்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் விசுவமடு சித்த மத்திய மருந்தகமானது மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்தியது. முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்களினால் நடாத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் ஏறத்தாழ 100 விவசாயிகள் பயன்பெற்றனர்.

மருத்துவமுகாம் சுதந்திரபுரம் – உடையார்கட்டு Read More »

மருத்துவர்களிற்கான ‘அக்கினிகர்ம’ பயிற்சி

சித்த வைத்தியசாலைகளில் சித்த விசேட சிகிச்சையினை மேம்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் மருத்துவர்களிற்கு ‘அக்கினிகர்ம’ பயிற்சியானது கடந்த 03.10.2022 ம் திகதி கீரிமலை சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் 14 மருத்துவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  

மருத்துவர்களிற்கான ‘அக்கினிகர்ம’ பயிற்சி Read More »

சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவை

முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவையானது 28.09.2022 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நடமாடும் சேவையானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதல்களுடன், சம்பத்நுவர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்  தனித்துவமான 10 இடங்களில் இடம் பெற்றது. இந்நடமாடும் சேவையில் மக்களின் அடிப்படை வசதிகளுக்கான

சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவை Read More »

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு நடைபெற்றது

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் உற்சவ காலத்தில் மேற்படி சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு 24.08.2022 தொடக்கம் 26.08.2022 வரை நடைபெற்றது. இதில் சுமார் 75 காட்சியறைகள் தொழிற்துறை திணைக்களத்தால் நிறுவப்பட்டு சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் திருமதி. ரூபிணி வரதலிங்கம், செயலாளர், மகளீர் விவகார அமைச்சு வடமாகாணம், திருமதி. வனஜா செல்வரட்ணம், வடமாகாணப் பணிப்பாளர், தொழிற்துறை திணைக்களம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்ததுடன் அனைத்து விற்பனைக்

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் உற்சவகாலத்தையொட்டி ஆலய சூழலில் நடாத்தப்பட்ட விசேட கலை நிகழ்வு

நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவ காலத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட கலை நிகழ்வுகள் கடந்த 20.08.2022 சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் நல்லூர் ஆலய சூழலில் அமைந்துள்ள மயிலூரான் அரங்கத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இ.வரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் உற்சவகாலத்தையொட்டி ஆலய சூழலில் நடாத்தப்பட்ட விசேட கலை நிகழ்வு Read More »

சுதேச மருந்துகளின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை நிலையம் – நல்லூர் உற்சவம் – 2022

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலிற்கமைய 2022 ம் ஆண்டின் நல்லூர் உற்சவத்தில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மருந்து உற்பத்தி பிரிவால் தயாரிக்கப்பட்ட சுதேச மருந்துகளை காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை நிலையமானது 17/08/2022 புதன்கிழமை அன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு திருவிழா முடியும் காலப்பகுதி வரை விற்பனை நடைபெற்றது. இவ் விற்பனை நிலையத்தில் சுதேச மருந்துகள், ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மருத்துவ ஆலோசனைகளும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஒழுங்கு

சுதேச மருந்துகளின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை நிலையம் – நல்லூர் உற்சவம் – 2022 Read More »