npc2018z

வடக்கின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் SMDK சமரவீர அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (14) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் காணப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த ஆளுநர் அவர்கள் கடற்படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார். இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு […]

வடக்கின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

வலி வடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட

வலி வடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம் Read More »

மல்லாவி தள வைத்தியசாலையில் சிறுநீரக நோய் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லாவி தள வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலைய கட்டடம் 08.06.2019 திகதியன்று சனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களால் முல்லைத்தீவு பொதுவிளையாட்டரங்கிலிருந்து இலத்திரனியல் முறைமூலமாக திறந்து வைக்கப்பட்டது. அனைவருக்கும் நலன் பெற்று ஆரோக்கியம் மிக்க மக்கள் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் குறித்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு, துணுக்காய் பிரதேசசபை தவிசாளர், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சு.சத்தியரூபன்,

மல்லாவி தள வைத்தியசாலையில் சிறுநீரக நோய் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது Read More »

வேணாவில் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம்  வேணாவில் கிராமிய சுகாதார நிலையம் ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தின் ஊடாக 07.06.2019 திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி உமாசங்கர், புதுகுடியிருப்பு பிரதேசசெயலர் ம.பிரதீபன், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கெங்காதீஸ்வரன், வைத்திய கலாநிதி சு.சத்தியரூபன், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

வேணாவில் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது Read More »

நாளை ஆளுநரின் பொதுமக்கள் தினம்

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நாளை (12 யூன் 2019) புதன்கிழமை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

கனேடிய உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 04 யூன் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வட பகுதி சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் , வட மாகாண மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் எவ்வகையிலான துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக கனடா அரசாங்கம் வழங்கவேண்டிய உதவிகள் தொடர்பிலும்

கனேடிய உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாண அரச அலுவலர்கள் மக்களுக்கு நன்மைபயக்க கூடிய விதத்திலும் மனிதாபிமானத்துடனும் சேவை செய்ய வேண்டும் – ஆளுநர்

வடமாகாணத்திலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் போருக்கு பின்னரான இத் தேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு நன்மை பயக்ககூடிய வகையிலும் மனிதாபிமானத்துடனும் பணியாற்றவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் நூலக கேட்போர்கூடத்தில் 31 மே 2019 அன்று நடைபெற்ற கொள்முதல் நடைமுறை மற்றும் ஒப்பந்த நிர்வாக பாடநெறியை (CIPPCA 2018/2019) பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்

வடமாகாண அரச அலுவலர்கள் மக்களுக்கு நன்மைபயக்க கூடிய விதத்திலும் மனிதாபிமானத்துடனும் சேவை செய்ய வேண்டும் – ஆளுநர் Read More »

வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாத்துறை – வடமாகாண ஆளுநர்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் கௌரவ வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்  ராகவன் அவர்கள் தலைமையில்      வடக்கின் உயிர்நாடியாக  திகழும் சுற்றுலா விடுதி உரிமையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இன்று (31) யாழ் ரில்கோ விடுதியில் இடம்பெற்றது இந்நிகழ்வில் ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் , சுயாதீனமாக இயங்கக் கூடிய ஒரே ஒரு மாகாணமாக வடமாகாணம் காணப்படுகின்றது. பொருளாதார ரீதியில் அதனை நாங்கள் அபிவிருத்தி அடையச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்தில் எமது சமூகத்தினையும் அபிவிருத்தி அடையச் செய்ய முடியும் என தெரிவித்தார். மேலும் வட மாகாணத்தின் உயிர் நாடியாகவும்

வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாத்துறை – வடமாகாண ஆளுநர் Read More »

வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

மாவட்ட மட்டத்திலும் மற்றும் தேசிய மட்டத்திலும் வெற்றி பெற்ற வவுனியா மாவட்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் 31.05.2019 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இக் கௌரவிப்பு நிகழ்வானது உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. சூ.ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இக் கௌரவிப்பு நிகழ்வில் மத்திய விவசாய அமைச்சினால் ‘நாம் வளர்த்து நாம் உண்போம்” எனும் விரைவுபடுத்தும் விவசாய அபிவிருத்தித் திட்டம்

வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கோப் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் ரிம் சட்ரன் ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 31 மே 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு Read More »