மாணவர்கள் கல்வி அறிவுடன் மட்டும் நின்று விடாது தலைமைத்துவ பண்பு மற்றும் பிறருக்காக பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
கல்வி அறிவை மட்டும் வழங்குவதால் ஒரு மனிதன் முழுமையடைவதில்லை, நல்ல குணம், தலைமைத்துவப் பண்பு மற்றும் பிறருக்காகப் பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன் மாணவர்கள் வளர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா – 2026 இன் முதலாம் நாள் நிகழ்வு இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். 1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வட்டு […]
