August 4, 2026

சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாகக் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களில், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் இன்று திங்கட்கிழமை (03.08.2026) பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. இன்று முதல் எதிர்வரும் 21.08.2026 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தேர்வு நடவடிக்கைகளுக்காக ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தினமும் […]

சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன Read More »

சமூகப் பிறழ்வுகளிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க வேண்டுமாயின் , அவர்களுக்குக் கலைகள் மற்றும் விளையாட்டுக்கள் ஊடான சிறந்த மாற்றுப் பாதையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும், – கௌரவ ஆளுநர்

ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம் அதன் கட்டடங்களிலோ பொருளாதாரத்திலோ இல்லை. அது எமது பாரம்பரியம், பண்பாடு, கலைகள் மற்றும் வீர வரலாற்றில்தான் தங்கியுள்ளது. தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய அதிவேக உலகில், எமது வேர்கள் மங்கிவிட்டால் நாம் முன்னேற்றமடைந்தாலும் எமது அடையாளத்தை இழக்க நேரிடும். கல்வியால் மனிதனின் அறிவு வளரும், ஆனால் வாழ்க்கையை முழுமைப்படுத்துவது கல்வி மட்டுமல்ல, அறிவுடனான பண்பு, திறமையுடனான ஒழுக்கம், கல்வியுடனான தலைமைத்துவம் ஆகியன இணைந்தால்தான் ஒரு முழுமையான மனிதன் உருவாகின்றான்.

சமூகப் பிறழ்வுகளிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க வேண்டுமாயின் , அவர்களுக்குக் கலைகள் மற்றும் விளையாட்டுக்கள் ஊடான சிறந்த மாற்றுப் பாதையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் Read More »