July 25, 2026

எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல் விதைப்புக்கான திகதியைத் தீர்மானிக்குமாறும், போதிய நீருள்ள குளங்களின் கீழான சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் […]

எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. Read More »

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை (Corporate Social Responsibility – CSR) வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட ஆரம்பக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், ‘மாகாண சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமான வழிகளில் ஒன்றாகப் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியும் காணப்படுகின்றது. எனினும், இதுவரை ஒரு சில

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். ‘யாழ்ப்பாண நண்பர்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்தச் சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டி இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. விளையாட்டின் ஊடாகப் பிரதேசங்களுக்கிடையிலான நல்லுறவையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சிநேகபூர்வ தொடரில்,

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். Read More »

ஒரு மனிதன் தன்னலமின்றி அறிவுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்தால், அவர் மறைந்த பிறகும் அவரது பெயர் என்றென்றும் வாழும் – கௌரவ ஆளுநர்

இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் போற்றும் வகையிலான ‘தமிழ்மொழித் தினமும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் – 2026’ நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24.07.2026) கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்தும்

ஒரு மனிதன் தன்னலமின்றி அறிவுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்தால், அவர் மறைந்த பிறகும் அவரது பெயர் என்றென்றும் வாழும் – கௌரவ ஆளுநர் Read More »