நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது
வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் தொடர்பில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விரிவாகத் தெரியப்படுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (24.04.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் அவர்களுக்கும், பிரதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும் […]
