விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் கீழ் 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (23.04.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக சுமார் 1,875 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் பாரிய உட்கட்டமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக, […]
