மணல் மாபியாவைப் போலவே நெல் சந்தையிலும் மாபியாக்கள் இயங்கி வருகின்றனர். இந்தச் சுரண்டலைத் தடுக்க இடைத்தரகர்களற்ற ஒரு பொறிமுறை அவசியமாகும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்யவும், மக்களுக்கு மலிவு விலையில் அரிசியை வழங்கவும் கூட்டுறவுச் சங்கங்களாலேயே முடியும். எமது இந்த மக்கள் நல முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்படும் மாபியாக்களைத் தாண்டி, இத்திட்டத்தை நாம் நிச்சயம் வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக விவசாயத் துறையில் நவீன மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் […]
