March 2026

‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பசுமையான மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க ஒரு நகரமாக மாற்றியமைக்கும் உயரிய நோக்கோடு, ‘இம்பக்ட்’ அணியினரால் ‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மாதிரிச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03.03.2026) காலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, இச்செயற்றிட்டம் தொடர்பில் இம்பக்ட் அணியினரால் ஆளுநருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இது வெறுமனே ஒரு மரநடுகைத் திட்டமாக […]

‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. Read More »

எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார்.

சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும் எனவும், இக்கருத்தரங்கின் ஊடாக முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண நிர்வாகம் தனது முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கு – 2026 இன்று

எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார். Read More »

வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் கோரிக்கை

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக பதபெந்தி அவர்களின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »