உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நடைபெற்றது.
எமது மக்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும், உலக வங்கியின் முதற்கட்ட அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் குருநகர் மீன்பிடித் துறைமுகம் ஆகிய செயற்றிட்டங்கள் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை […]
