February 21, 2026

புதிய நெல் வர்க்க அறிமுகம் Ld-368 அறுவடை விழா

யாழ் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் வர்க்கங்கள் மற்றும் சிவப்பு நெல் வர்க்கங்கள் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் இம்முறை கைதடி விவசாயப்போதனாசிரியர் பிரிவில் நாவற்குழி கிழக்கில் திரு தங்கராஐh அவர்களின் வயலில் Ld-368 சிவப்பு சம்பா 3 ½ மாத வயது வர்க்கம் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் பரீட்சார்த்த ரீதியில் விதை உற்பத்தியாக மேற்கொள்ளப்பட்டது. இதன் அறுவடை விழா 03.02.2026 அன்று கைதடி விவசாயப்போதனாசிரியர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி.சு.செந்தில்குமரன் மாகாண விவசாயப்பணிப்பாளர்(வ.மா) […]

புதிய நெல் வர்க்க அறிமுகம் Ld-368 அறுவடை விழா Read More »

கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டம், இவ்வாண்டும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இவ்வாண்டு மேலும் விரிவாக்கி வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடந்த ஆண்டு இறுதியில் தெல்லிப்பழை மானிடம் அறக்கட்டளையின் கோரிக்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட குளங்களைத் தூர்வாருவதற்கான செயற்றிட்டத்தை, இவ்வாண்டும் தொடர்ச்சியாகச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குளங்களைத் தூர்வாருவதன் ஊடாக வெள்ளப்பெருக்கைக்

கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டம், இவ்வாண்டும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

கல்லுண்டாய் பகுதி மக்கள் மழைக் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கல்லுண்டாயில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்குக் காரணமாக இடம்பெயரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கத்தின்

கல்லுண்டாய் பகுதி மக்கள் மழைக் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி ஆகியோர், வடக்கு மாகாண ஆளுநரை இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மீதான ஈர்ப்பை இளையோரிடத்தில் தூண்டும் வகையில் பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கும் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம்.

வடக்கு மாகாணத்தில் கிராமப்புறங்களிலுள்ள இளையோரிடத்திலும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கல்விகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரந்தளவிலான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கும், இத்துறை மீதான ஈர்ப்பை இளையோரிடத்தில் தூண்டும் வகையில் பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்துப்

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மீதான ஈர்ப்பை இளையோரிடத்தில் தூண்டும் வகையில் பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கும் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம். Read More »