September 30, 2025

இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியான காலநிலைக்கு ஏற்ற நெல் வர்க்கமாக டீப 377(வெள்ளை) நெல் வர்க்கம் இயந்திர நாற்று நடுகை மூலம் பரீட்சார்த்தமாக புளியம்பொக்கனை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறுவடை வயல் விழா நிகழ்வானது 24.09.2025 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திரு.யே.சேயோன் தலைமையில் நாகேந்திரபுரம் புளியம்பொக்கனை எனும் இடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். […]

இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு Read More »

யாழ். விசேட பொருளாதார மத்திய நிலையம் மட்டுவிலில் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (30.09.2025) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன்,

யாழ். விசேட பொருளாதார மத்திய நிலையம் மட்டுவிலில் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டது Read More »

இன்று மொழியறிவுக்கு மேலதிகமாக கணனியறிவும் அவசியம். அதனூடாக வேலை வாய்ப்புக்களை இலகுவாகப் பெறக் கூடியதாக இருக்கும். – ஆளுநர்

எமது தாய்மொழிக்கு மேலதிகமாக இன்னொரு மொழியைக் கற்பதால் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை நாம் இலகுவாக்கிக் கொள்ள முடியும். சிங்கள மொழியைக் கற்றிருந்தால் இலங்கையின் எந்தப் பாகத்திலும் பணியாற்றக்கூடியதாக இருக்கும். இன்னொரு மொழியைக் கற்பதால் ஒருபோதும் நாம் குறைந்துவிடப்போவதில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஹெல்தி லங்கா நிறுவனம் மற்றும் சூரிய நிறுவகம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுதுமலை

இன்று மொழியறிவுக்கு மேலதிகமாக கணனியறிவும் அவசியம். அதனூடாக வேலை வாய்ப்புக்களை இலகுவாகப் பெறக் கூடியதாக இருக்கும். – ஆளுநர் Read More »