September 22, 2025

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சிறுதானிய செய்கை ஊக்குவித்தல் வயல்விழா

2025 ஆம் ஆண்டுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் யாழ்மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தி ஊக்குவித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தினை செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவடைவிழா நிகழ்வானது திருநெல்வேலி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நந்தாவில் கிராமத்தில் 16.09.2025 அன்று காலை 09.00 மணிக்கு தொழில்நுட்ப உதவியாளர் இ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயப்பணிப்பாளர், வட மாகாணம் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் கலந்து சிறப்பித்திருந்தார். பிரதி விவசாயப்பணிப்பாளர், பாட விதான உத்தியோகத்தர்கள், கமநல சேவை […]

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சிறுதானிய செய்கை ஊக்குவித்தல் வயல்விழா Read More »

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு, நேரடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விளையாட்டிற்குரிய மாற்றுத்திறன் வகைப்பாட்டை உறுதிப்படுத்திய மாற்றுத்திறனுடைய வீர வீராங்கனைகளுக்கான முதலாவது மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியானது துரையப்பா விளையாட்டரங்கில் 2025.09.10ஆம் திகதி மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்; நடாத்தப்பட்டது. ஆரம்ப நிகழ்வானது காலை 8.30 மணிக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. தனுஜா லுக்சாந்தன் தலைமையில் பிரதம விருந்தினர் திரு.மு.நந்தகோபாலன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு) அவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி ஆரம்பித்து

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025 Read More »