July 2025

வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு

கால்நடை வைத்தியர்கள் மாத்திரமல்ல அனைத்துத்துறையினரும் பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில்தான் தங்கள் சேவைகளை முன்னெடுக்கின்றார்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்ததுடன், இடர்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு தேவையான உங்கள் சேவைகள் தொடரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு வலம்புரி ஹோட்டலில் இன்று புதன்கிழமை (02.07.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு ஆளுநர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, […]

வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு Read More »

கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும்

போர் – இடப்பெயர்வுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் எப்படியொரு சமநிலை இருந்ததோ அதைப்போன்றதொரு நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை (02.07.2025) பாடசாலையில் பதில் அதிபர் இ.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநரும், சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராஜாவும், கௌரவ விருந்தினராக வலிகாமம்

கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் Read More »

‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு

தவறான தகவல்கள் என்ற விடயம் முன்னைய காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், டிஜிட்டல் யுகம் அதன் அணுகலையும் வேகத்தையும் பெருக்கியுள்ளது, இதனால் பொய்யிலிருந்து உண்மையைப் பிரிப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் லேர்ன்ஏசியா (LIRNEasia) நிறுவனமும் இணைந்து நடத்திய ‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு நோர்த்கேட் ஹொட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (01.07.2025) நடைபெற்றது.

‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார்

வவுனியா மாவட்டத்துக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (28.06.2025) பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பயணத்தின் ஓர் அங்கமாக வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார். இதன்போது சபையின் தவிசாளர் எஸ்.சி.வீரக்கோன், ஆளுநர் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் ஆகியோரை வரவேற்றார். வவுனியா பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை ஆளுநர் பார்வையிட்டார். நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்டு

வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார் Read More »

வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல் விழா

மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தேத்தாவடி கிராமத்தில் வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல்விழா திரு.நா.கிருஸ்ணமூர்த்தி எனும் விவசாயியின் வயல்நிலத்தில் 01.07.2025 இன்று நடைபெற்றது. இவ்வயல் விழாவை உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் திருமதி. காயத்திரி கிசோபன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்வயல் விழாவின் விருந்தினர்களாக பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.ஜே.மேர்வின் றொசான் றோச் பாடவிடய உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் எனப்

வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல் விழா Read More »

வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்

வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (28.06.2025) அன்று விசேட கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்டச் செயலர் சரத் சந்திர, வவுனியா மாநகர

வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத் திணைக்களத்தின் கீழ் உள்ள கனகாம்பிகைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில்  உள்ள அம்பாள் நகர் கிராம சேவையாளர் பிரிவில். 27.06.2025 அன்று மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை ஊடாக மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளுக்கு  தலா 0.5 Ac  விஸ்தீரணத்திற்கு ஏற்ப நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வின் போது நிலக்கடலை விளைசசல் அதிகரிப்பதற்கான விசேட பயிற்சி வகுப்பு நடாத்தப்பட்டு விதைகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில்  பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள்,

மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம் Read More »