வடக்கு மாகாணத்துக்கு கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை விரைந்து – வினைத்திறனாக செலவு செய்து முடிக்கவேண்டும். – கௌரவ ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சில தொழில்துறைக்கான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி நேற்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விரைவில் அவை நிரப்பப்படும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (17.07.2025) கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இ.சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது. […]