July 2025

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் – கௌரவ ஆளுநர்

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் உள்ளூராட்சிமன்றங்களை முன்னெடுக்குமாறும் அதை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22.07.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், சில உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கான அமைப்பே உள்ளூராட்சிமன்றம் என்பதை நினைவிலிருத்திச் செயற்படவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி […]

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் – கௌரவ ஆளுநர் Read More »

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. – கௌரவ ஆளுநர்

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட உற்பத்தியாளர்களே அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள்

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையிலான குழுவினர் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை மாலை (21.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் ஆதன மதிப்பீடு மேற்கொண்டு வரி அறவிடுவதற்கான ஒத்துழைப்புக்கள் மற்றும் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்தனர். மேலும், சபையின் இரண்டு உப அலுவலகங்கள் தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் நிலையில் அதனை அமைத்துத் தருவதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் கோரிக்கை

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின்; ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025.07.17 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வ-பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை குழுமத்தால் வெகு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி விழாவில் கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் பிரதம

வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025 Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலக பிரிவில் மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்ட கீரிசுட்டான் கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 18.07.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கீரிசுட்டான் கிராமத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன் மற்றும் மடு பிரதேச செயலாளர் திரு பீட்

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

பாதுகாக்கப்பட்ட வலை இல்லத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் இலாபத்தை நோக்கிய கறிமிளகாய்ப் பயிர்ச்செய்கை

                         இங்கே பார்வையிடவும்          

பாதுகாக்கப்பட்ட வலை இல்லத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் இலாபத்தை நோக்கிய கறிமிளகாய்ப் பயிர்ச்செய்கை Read More »

இன்று வசதிபடைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் துரித உணவுகளால் இந்தப் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். – கௌரவ ஆளுநர்

தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள் இணைந்து நடத்திய இளையோர் சுகநலக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடை பவனிக்கும் என்பன வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் இன்று திங்கட் கிழமை (21.07.2025) நடைபெற்றது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கவிஞர் அம்பி கலையரங்கில் மேடை நிகழ்வுகள் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில்,

இன்று வசதிபடைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் துரித உணவுகளால் இந்தப் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். – கௌரவ ஆளுநர் Read More »

பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு

இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேகாரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு, சிரேஷ்ட வெளிநாட்டுச்சேவை உத்தியோகத்தர் அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (19.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில்

பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு Read More »

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா நிகழ்வுகள் புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து மானிப்பாயில் விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகா சமாதி தினமான இன்று சனிக்கிழமை (19.07.2025) நடத்தின. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் சந்தித்துக் கலந்துரையாடினார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் மனுக் கையளித்ததுடன், சபையில் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமை தொடர்பிலும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார். இயலுமான வரையில் சபைக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக ஆளுநர் இதன்போது பதிலளித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »