June 2025

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

யாழ் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வீட்டுத்தோட்ட பொதி வழங்கல் நிகழ்வு 26.06.2025 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய விரிவுரை மண்டபத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்தில் 3.5 மில்லியன் ஒதுக்கீட்டில் மாவட்ட ரீதியாக 403 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர் ஒரு பயனாளிக்கு வெண்டி, கீரை, பயிற்றை, பாகல், புடோல் விதைகளும் […]

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று இன்றைய கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) நடைபெற்றது. ஆளுநர் தனது வரவேற்புரையில், அதிமேதகு ஜனாதிபதி

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று இன்றைய கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, யாழ். மாவட்ட விமானப் படைத்தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட விமானப் படைத்தளபதியாகப் பொறுப்பேற்ற குறூப் கப்டன் செனவிரத்ன ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27.06.2025) சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, யாழ். மாவட்ட விமானப் படைத்தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு பரந்தளவில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்த தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார். தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் உள்ளிட்ட

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை Read More »

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் இடையில் ஒரே சீரான மாகாண நிதி ஒழுங்கு விதிகளை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் இடையில் ஒரே சீரான மாகாண நிதி ஒழுங்கு விதிகளை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப்பட்டறைத் தொடரின் 4ஆவது அமர்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் கிளிநொச்சியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் இன்று வெள்ளிக்கிழமை (27.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், நிர்வாகம்

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் இடையில் ஒரே சீரான மாகாண நிதி ஒழுங்கு விதிகளை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

வவுனியா மாவட்டத்தில் தேசிய களை நெல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடாத்தப்பட்ட களைநெல் விழிப்புணர்வு நிகழ்வு

வயல் நிலங்களில் களை நெல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நாடளாவிய களை நெல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நமது வவுனியா மாவட்டத்தில் 27.06.2025, வெள்ளிக்கிழமையன்று விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று மடுக்கந்தை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விவசாயிகள் நேரடியாக வயல் நிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு களை நெல்லினை இனங்காண்பது, அதனைக் கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்காலங்களில் களை நெல்லின் பரவலைத் தடுப்பது தொடர்பான விளக்கங்கள், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும்

வவுனியா மாவட்டத்தில் தேசிய களை நெல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடாத்தப்பட்ட களைநெல் விழிப்புணர்வு நிகழ்வு Read More »

தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல்

தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (26.06.2025) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் பல்வேறு திணைக்களங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் போதியளவு முன்னேற்றம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது தொடர்பில் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு

தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (26.06.2025) நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 25.06.2025 அன்று புதன்கிழமை மாலை சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச்

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

வேலணை பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச பண்பாட்டு விழா

தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் – பழக்கவழக்கங்கள் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறு பாதுகாப்பதற்காகத்தான் இவ்வாறான பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச பண்பாட்டு விழா வேலணை துறையூர் ஐயனார் சனசமூக நிலையத்தில் நாடக கலைஞர் அமரர் செல்லையா சிவராசா அரங்கில் 24.06.2025

வேலணை பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச பண்பாட்டு விழா Read More »