March 5, 2024

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும்சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் எடுத்துரைப்பு.

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கொழும்பு சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார  அமைச்சில் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என […]

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும்சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் எடுத்துரைப்பு. Read More »

காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாணகௌரவ ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்னவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில் கௌரவ ஆளுநரினால் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துக்கூறப்பட்டதற்கு அமைவாக, காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் பரிந்துரைகளை அனுப்புவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்ன, வடக்கு மாகாண

காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாணகௌரவ ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை Read More »

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஊராட்சி முற்றக்கூட்டங்கள் இடம்பெற்றன

மார்ச் 1, 2024 அன்று, வவுனியா மற்றும் முல்லைத்தீவில் உள்ள மாவட்டச் செயலகங்களில் தனித்தனியாக இரண்டு ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளுர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் வடக்கு மாகாண

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஊராட்சி முற்றக்கூட்டங்கள் இடம்பெற்றன Read More »