வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர்

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் 23 யூலை 2019 அன்று மாலை இடம்பெற்றது. வடமாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் மக்கள் அதிகளவில் உயிரிழப்புக்கள், உடல் அவயவங்கள் மற்றும் சொத்திழப்புக்களுக்கும் முகம்கொடுத்து வருவதன் காரணமாக இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த வீதிப் பாதுகாப்பு சபை செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு