வட மாகாண கெளரவ ஆளுநருக்கும் கடற்படையின் வடபிராந்தியக் கட்டளைத் தளபதிக்குமிடையில் சந்திப்பு!

வட மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் இலங்கை கடற்படையின் வடபிராந்தியக் கட்டளைத்தளபதி ரியல் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
வடக்குமாகணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கடற்படையினரிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக உள்ள சிக்கல்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் அபிமானத்தை வெற்றிகொள்ளும் நோக்கில், கடற்படையின் வடபிராந்தியத்திற்குள் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு கெளரவ ஆளுநர் இதன் போது கோரிக்கை விடுத்தார். இந்த விடயம் தொடர்பில் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கத்தயாரென வடபிராந்திய கட்டளைத்தளபதி இதன் போது தெரிவித்தார்..