வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக திருமதி நி. தவலோஜினி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் நேற்று (07.08.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி கு. காஞ்சனா அவர்கள் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி நி. தவலோஜினி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
