பெறுமதி சேர் வரி (VAT ) தொடர்பான செயலமர்வு

வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தின் ஒழுங்கமைப்புடன் 2025.06.03-ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மு.ப. 9.00 மணிக்கு வட பிராந்திய இறைவரித் திணைக்களத்தின் வழிகாட்டுதலில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் (வ.மா) திரு. ந. திருலிங்கநாதன் அவர்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாணத்தில் கூட்டுறவுச் சங்கங்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான சட்டரீதியான விளக்கங்கள் அதனை எவ்வாறு கணிப்பீடு செய்வது, நிகழ்நிலையூடாக காலாண்டுக்கான வரியினை தரவேற்றம் செய்வது தொடர்பாகவும் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் வரி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாகவும் வட மாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வட பிராந்திய ஆணையாளர், உதவி ஆணையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் வரி செலுத்துவதன் அவசியத்தினை வலியுறுத்திக் கூறியதுடன் வரி செலுத்தத் தவறும் சந்தர்ப்பத்தில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டிவரும் என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன் செயலமர்வில் கலந்துகொண்டவர்களினால் கேட்கப்பட்ட ஐயங்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்கள வட பிராந்திய உத்தியோகத்தர்களினால் விளக்கமளிக்கப்பட்டது. இச் செயலாமர்வில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பொதுமுகாமையாளர்கள், கணக்காளர்கள், விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் ஐந்து மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளாகள், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.