“டித்வா” சூறாவளி நிவாரணம்: அரச சாரதிகள் சங்கம் நிதியுதவி! – ஆளுநரிடம் காசோலை கையளிப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் Rebuilding Sri Lanka நிதியத்துக்கு வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் தங்களது உறுப்பினர்களிடமிருந்து திரட்டப்பட்ட 50,000 ரூபா பணத்தை வைப்பிலிட்டு அதன் ஆவணத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று திங்கட் கிழமை (12.01.2026) ஆளுநர் செயலகத்தில் வைத்துக் கையளித்தனர். இந்த ஆவணம் ஜனாதிபதி செயலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.