கிளிநொச்சி வியாபார சேவை நிலையம் திறந்து வைப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 12/07/2024  அன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வியாபார சேவை நிலையமும் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள வட மாகாண முகாமைத்துவ பயிற்சி நிலையத்தின் ஆண்கள் விடுதியும் திறந்துவைக்கப்பட்டது.