இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமலான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு

இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமலான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் 25.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை துணைத்தூதுவர் மாண்புமிகு சாய்முரளி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டு, அன்பளிப்புக்களை மக்களுக்கு அவர் வழங்கி வைத்தார்.