ஆளுநரின் செயலாளரினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன

26 பெப்பிரவரி 2020 அன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரின் செயலாளர் திரு எஸ் சத்தியசீலன் அவர்களால் இரு புதிய நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளராக திரு ராஜேந்திரம் குருபரன் தனது நியமன கடிதத்தை ஆளுநரின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டார் இவர் முன்பு வடமாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளராக கடமையாற்றிய திரு பாலன் முகுந்தன் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளராக தனது புதிய நியமனக் கடிதத்தை ஆளுநரின் செயலாளரிடமிருந்து இன்று பெற்றுக்கொண்டார்.