வடக்கின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் SMDK சமரவீர அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (14) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் காணப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த ஆளுநர் அவர்கள் கடற்படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான புனித பூமி மற்றும் மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்தும் புதிய கடற்படை கட்டளை தளபதியுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், வடமாகாணத்தின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் கடற்படையினருக்குமிடையில் சுமூகமான நிலைமைகளை கட்டியெழுப்ப மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அவர்கள் இதன்;போது கோரிக்கை விடுத்தார்.