கண்பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தால் மாற்றுத்திறனாளிகள் தின மாபெரும் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2025ஆம் ஆண்டுக்கான சீட்ழுப்பின் முதலாவது சீட்டை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 06.05.2025 அன்று செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக்கொண்டு ஆரம்பித்து வைத்தார்.