வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக க. ஏகாந்தன் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்து கொண்டார்.

இவருக்கான நியமனம் எதிர்வரும் 14.09.2026 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பா.முகுந்தன் அவர்கள் மத்திய அரச சேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஆளுநர் அலுவலக உதவிச் செயலராகக் கடமையாற்றிய க.ஏகாந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.