விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் தொடர்ச்சியாக சிரமதானம் மூலம் பாத்தீனியம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் 18.06.2025 அன்று கிருஸ்ணபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவின் தொண்டமாநகர் பகுதியில் சிரமதானமும் மக்களுக்கு விழிப்புணர்வும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் பாத்தீனியம் காணப்படும் பிரதேசங்களில் தொடர்ந்து சிரமதானம் மற்றும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு செயற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள் ,கிருஸ்ணபுரம் பகுதி விவசாய போதனாசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களுக்கு விளக்கமளித்ததுடன் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கியிருந்தனர்.