அச்சுவேலியில் அமையப்பெற்றுள்ள வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் சான்றுபெற்ற சிறுவர் பாடசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார்

அச்சுவேலியில் அமையப்பெற்றுள்ள வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் சான்றுபெற்ற சிறுவர் பாடசாலைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை (19.06.2025) கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார். அவரை மாகாண ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் வரவேற்றார்.

சான்றுபெற்ற சிறுவர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடி ஆளுநர், அவர்களின் தேவைகளை கேட்டறிந்துகொண்டார். அத்துடன் அங்கு மரநடுகையையும் ஆளுநர் மேற்கொண்டார். சிறுவர்களாலும், ஆணையாளராலும், பாடசாலையின் அதிபர் உள்ளிட்டோராலும் பல விடயங்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டன.

சான்றுபெற்ற சிறுவர் பாடசாலையைச் சூழவுள்ள பகுதியை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கோரியதுடன், அந்தப் பிரதேசத்துக்கான முதன்மை திட்டத்தை தயாரிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதேவளாகத்தில் இயங்கிவரும் மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் வைத்தியசாலைகளையும் ஆளுநர் பார்வையிட்டார்.

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு நிலையத்தை இங்கு அமைப்பது தொடர்பில் ஆராயப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.