தேனீக்களின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டு மே 20 முதன்முறையாக உலக தேனீ தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ‘‘நம் அனைவரையும் வளர்க்க இயற்கையால் ஈர்க்கப்பட்ட தேனீ” எனும் கருப்பொருளினை மையமாக கொண்டு 2025 ஆம் ஆண்டின் உலக தேனீ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுடன் கூடிய களச்செயற்பாட்டு விழாவானது வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் (CSIAP) அனுசரணையுடன் புதுக்குடியிருப்பு மந்துவில் விவசாய போதனாசிரியர் பிரிவின் தொழில்நுட்ப உதவியாளர் திரு. பு.பிரசாந்தன் தலைமையில் உலக தேனீக்கள் தினமும் தேனீ வளர்ப்பு தொடர்பான வயல் விழா நிகழ்வும் வள்ளிபுனம் பொது நோக்கு மண்டபத்தில் 21.05.2025 புதன் கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி கிருபவதனி சிவதீபன், உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. மேரி ஆன்சலா லக்சன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.இ.விஜயகுமார், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.து.ஜெயந்தன், காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாயத்திட்டத்தின் விவசாய நிபுணர் திரு.க.வசந்தன், பாடவிதான உத்தியோகத்தர் திருமதி கமலதீபன் கேமா, விவசாயப் போதனாசிரியர்கள், கிராமசேவையாளர்கள், கிராம மக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள உயிலங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நீலாசேனை எனும் கிராமத்தில் திரு.லெ.சக்திவேல் என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் உலக தேனீ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுடன் கூடிய களச்செயற்பாட்டு விழாவானது 21.05.2025 புதன்கிழமை காலை 10 மணிக்கு உயிலங்குளம் விவசாயப் போதனாசிரியர் திருமதி. காயத்திரி கிசோபன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களும், உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.ஜே.மேர்வின் றொசான் றோச் அவர்களும் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.