764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை – ஆளுநர்

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20.05.2025) எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக பேருந்து சேவையை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆளுநர் செயலகக் கூட்டத்தில் உறுதியளித்திருந்த நிலையில் அதனைச் செயற்படுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியூடாக அறிவுறுத்தினார்.