பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம்

பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் செப்ரெம்பர் மாதத்திலிருந்து நாடு முழுவதும் இரண்டாண்டு காலப்பகுதியில் ஆறு இடங்களுக்கு தனது பயணத்தை மேற்கொள்கின்றது அதன் ஜந்தாம் கட்டமாக மன்னார் நகர மண்டபத்தில் செப்ரெம்பர் 4 முதல் 11 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது அதுதொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 29.07.2024 திகதி அன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத்தலைவர்களுடன் ஸ்கோப் (SCOPE) ஆலோசகர் மற்றும் உத்தியோகத்தர்களும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.