மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழாவில்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் கலந்துக்கொண்டார்

மன்னார் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று நடைபெற்றது. மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையொட்டி இன்று மீண்டும் அன்னைக்கு முடி  சூட்டப்பட்டது. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின்  தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவனியும் நடைபெற்றது.

இன்றைய திருவிழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக் கொண்டார். நாட்டின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும், இலட்சக்கணக்கான பக்தர்களும் மடு அன்னையின்  ஆடித்திருவிழாவில் கலந்துக்கொண்டனர்.