தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 20 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 20.02.2024 தொடக்கம் 22.02.2024 வரை 3 நாட்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.நி.சுந்தரவதனி, அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் மற்றும் திருமதி.க.துஷயந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர்.

இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு தொழில் யோசனைகளை கண்டறிந்து அவற்றில் இருந்து மிகப்பொருத்தமான ஒரு தொழில் யோசனையை பயிற்சியின் நிறைவின் போது தெரிவு செய்து அத்தொழிலினை ஆரம்பிப்பதற்கான ஆலோசனையுடன் இப் பயிற்சி நெறியானது நிறைவு பெற்றது.