தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வேலனை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 21 செப்ரம்பர் 2023 தொடக்கம் 23 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மண்கும்பானில் அமைந்துள்ள சௌபாக்கியா நிலையத்தில் நடைபெற்றது.

இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.பத்மநாதன் ராகவன் – தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர், முதன்மை வளவாளராகவும் திரு.கொன்ஸ்ரன்னரன் அன்ரன் ஜெகன் – அபிவிருத்தி உத்தியோகத்தர், துணை வளவாளராகவும் கடமையாற்றினர்.

இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு தொழில் யோசனைகளை கண்டறிந்து அவற்றில் இருந்து மிகப்பொருத்தமான ஒரு தொழில் யோசனையை பயிற்சியின் நிறைவின் போது தெரிவு செய்து அத்தொழிலினை ஆரம்பிப்பதற்கான ஆலோசனையுடன் இப் பயிற்சி நெறியானது நிறைவு பெற்றது.