சுகாதார அமைச்சு

பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட குழந்தைகள் விடுதி  கையளிக்கப்பட்டது

பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்பு செய்யப்பட்  குழந்தைகள் விடுதி  திறப்பு விழா செப்டம்பர் 07, 2020 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ. திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விடுதியை திறந்தவைத்தார். மறைந்த விஜயரத்னா குருக்கள் மற்றும் மறைந்த சந்திரகுமாரி அம்மா ஆகியோரின் நினைவாக  திரு , திருமதி கீதா மாதவன் ஐயரின் நிதி உதவியுடன் விரைவான புதுப்பித்தல் திட்டம் 2020 இன் கீழ் இந்த குழந்தைகள் விடுதி  […]

பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட குழந்தைகள் விடுதி  கையளிக்கப்பட்டது Read More »

சுகாதார அமைச்சின் 72 வது தேசிய சுதந்திரதின விழா வைபவம்

வடமாகாண சுகாதார அமைச்சின் “ பாதுகாப்பான தேசம் – செழிப்பான நாடு” என்னும் தொனிப்பொருளை முன்னிலைப்படுத்தி இலங்கையின் 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் 04.02.2020 அன்று காலை 8.00 மணியளவில் அமைச்சின் முன்றலில் நடைபெற்றது. இன்நிகழ்வின் போது சுதந்திரதினத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்கள் உரையாற்றினார். அதனை தொடந்து அலுவலக சூழலை துப்பரவு செய்யும் சிரமதானப்பணியும் மரநடுகை நிகழ்வுகளும் நடைபெற்றது. இன்நிகழ்வில் அமைச்சின் பிரதம கணக்காளர் உத்தியோகத்தர்கள், மற்றும்

சுகாதார அமைச்சின் 72 வது தேசிய சுதந்திரதின விழா வைபவம் Read More »

புதுவருடத்தில் அரச சேவை சத்திய பிரமாணம் செய்து விசேட நிகழ்ச்சித் திட்டத்துடன் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

வடமாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சும், மாகாண சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து இன்று 01.01.2020 காலை 9.30 மணிக்கு சுகாதார அமைச்சின் முன்றலில் சகல அலுவலர்களின் பங்குபற்றுதலோடு புதுவருடத்திற்கான சத்தியபிரமாணம் நிகழ்வும், அதனை தொடர்ந்து விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்நிகழ்வு அமைச்சின் செயலாளர் திரு க.தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, அவர் தலைமையுரை ஆற்றுகையில், இப்புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான இனிய புதுவருட நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொண்டு

புதுவருடத்தில் அரச சேவை சத்திய பிரமாணம் செய்து விசேட நிகழ்ச்சித் திட்டத்துடன் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு Read More »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அடிக்கல் நாட்டும் வைபவம் 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அடிக்கல் நாட்டும் வைபவமானது 16.08.2019 ஆம் திகதி நடைபெற்றது. இக்கட்டடமானது நெதர்லாந்து அரசின் இலகு கடன் உதவியினால் உருவாக்கப்படவுள்ளது. சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்தோடு இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் பசத்தியலிங்கம் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நெதர்லாந்து செயற்திட்ட பணிப்பாளர்கள், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார சேவைகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அடிக்கல் நாட்டும் வைபவம்  Read More »

சாவகச்சேரி ஆதார வைத்தியாலையில் குணநலம்பெறும் நிலையம் (Healing Center) திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள குணநலம் பெறும் நிலையம் 15-08-2019 அன்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியாலையில் குணநலம்பெறும் நிலையம் (Healing Center) திறந்து வைக்கப்பட்டது. Read More »

வவுனியா பொது வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

வவுனியா பொது வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது 14 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெற்றது. இவ் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு ஆகியன நெதர்லாந்து அரசின் இலகு கடன் உதவியுடன் உருவாக்கப்படவுள்ளன. சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முதன்மை

வவுனியா பொது வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது Read More »

வடமாகாண சுகாதார அமைச்சுக்கு பாராளுமன்ற அரச கணக்கு நிதிக் கோட்பாடுகள் வினைத்திறன்மிக்கதாக செயற்பட்டமைக்கான தங்கப்பதக்கம்

பாராளுமன்ற அரச கணக்கு குழுவினால் 2017ம் ஆண்டுக்காக நடாத்தப்பட்ட அரச அலுவலகங்கள், நிதிக் கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில் வினைத்திறனாக செயற்பட்டமைக்காக வடமாகாணத்தின் சுகாதார அமைச்சுக்கு தங்க விருது வழங்கப்பட்டது. இன் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கடந்த 05.07.2019; திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாணத்தின் சுகாதார அமைச்சுக்குகான விருது பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜெயசூரிய அவர்களினால் வடமாகாணத்தின் சுகாதார அமைச்சின் செயலாளர் திரு சி. திருவாகரன்

வடமாகாண சுகாதார அமைச்சுக்கு பாராளுமன்ற அரச கணக்கு நிதிக் கோட்பாடுகள் வினைத்திறன்மிக்கதாக செயற்பட்டமைக்கான தங்கப்பதக்கம் Read More »

பின் தங்கிய பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கான தேவைகள் தொடர்பான களவிஜயம் – பிரதேச வைத்தியசாலை, நெடுந்தீவு

பின் தங்கிய பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கான மருத்துவ சேவையினையும் வைத்தியசாலையின் தேவைகளையும் கண்டறிந்து கொள்ளும் நோக்குடன், வடமாகாண சுகாதார அமைச்சும், மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையும் இணைந்து பின் தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, அவற்றின் தேவைகள் பற்றிய கலந்துரையாடலொன்று 09 யூலை 2019 நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர்,

பின் தங்கிய பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கான தேவைகள் தொடர்பான களவிஜயம் – பிரதேச வைத்தியசாலை, நெடுந்தீவு Read More »

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பலூன் பறக்கவிடும் நிகழ்வு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சில் 26.06.2019 அன்று பலூன் பறக்கவிடும் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொனிப்பொருள் அடங்கிய பதாதைகள் காற்று நிரப்பப்பட்ட பலூனில் இணைத்து வானில் பறக்கவிடப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு.சி.திருவாகரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும்  அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பலூன் பறக்கவிடும் நிகழ்வு Read More »

மல்லாவி தள வைத்தியசாலையில் சிறுநீரக நோய் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லாவி தள வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலைய கட்டடம் 08.06.2019 திகதியன்று சனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களால் முல்லைத்தீவு பொதுவிளையாட்டரங்கிலிருந்து இலத்திரனியல் முறைமூலமாக திறந்து வைக்கப்பட்டது. அனைவருக்கும் நலன் பெற்று ஆரோக்கியம் மிக்க மக்கள் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் குறித்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு, துணுக்காய் பிரதேசசபை தவிசாளர், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சு.சத்தியரூபன்,

மல்லாவி தள வைத்தியசாலையில் சிறுநீரக நோய் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது Read More »