சுகாதார அமைச்சு

இலவச சித்த மருத்துவ முகாம் மன்னாரில் இடம்பெற்றது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் டொன் பொஸ்கோ ரெக் மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், டொன் பொஸ்கோ இயக்குனர், சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு […]

இலவச சித்த மருத்துவ முகாம் மன்னாரில் இடம்பெற்றது Read More »

சர்வதேச மகளிர்தினம் – 2022 – வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம்

2022 ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 08/03/2022 செவ்வாய்கிழமை அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு விசுவமடு மத்திய சனசமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரின் பல்வேறு படிநிலைகளுக்குரிய ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் பாரம்பரிய வைத்தியர்கள் கௌரவிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு மூலிகைக் கன்றுகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின்

சர்வதேச மகளிர்தினம் – 2022 – வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் Read More »

கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்

‘வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு லட்சம் வேலை’ எனும் திட்டத்தின், கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாகக் கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை வளாகத்தில் சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் கடந்த 03.02.2022 சுப நேரத்தில் நடைபெற்றது. ரூபா 0.25 மில்லியன் ஆரம்ப நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மாதாந்தம் 1000 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களால் அடிக்கல்  நாட்டப்பட்டது. இந்நிகழ்வில், சுதேச மருத்தவத் திணைக்களத்தின் ஆணையாளர்,  மருத்துவமனையின் மருத்துவப் பொறுப்பதிகாரி,

கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் Read More »

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மற்றும் “பரிகாரி” சஞ்சிகை வெளியீடும், மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சி

மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சியில்; கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையமானது கொவிட் 19 கடந்த 29.12.2021ம் திகதி அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இந் நிலையமானது கொவிட் 19 ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில், உதவிப் பிரதம செயலாளர், வடக்கு மாகாணம், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயவாளர், கிளிநொச்சி மாவட்ட செயலர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர்இ சித்த வைத்திய பிரதி மாகாண ஆணையாளர்இ கிளிநொச்சி பிராந்திய சேவைகள்

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மற்றும் “பரிகாரி” சஞ்சிகை வெளியீடும், மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சி Read More »

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு

மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பில் கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையமானது கடந்த 29.12.2021ம் திகதி அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இந் நிலையம் கொவிட் 19 ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயலாளர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர்இ சித்த வைத்திய பிரதி மாகாண ஆணையாளர்,  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேச செயலர் மற்றும் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு Read More »

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது.

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 19.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபர், இந்தியத்துணைத்தூதுவர், வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், பிரதி ஆணையாளர், கரைச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட ஆயர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், பாரதிபுரம் மகாவித்தியாலய அதிபர்,

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது. Read More »

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது.

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பலநோக்கு மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 12.12.2021 காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர், சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், பிரதி மாகாண ஆணையாளர், வலிமேற்கு பிரதேச சபை தலைவர், சங்கானை பிரதேசசெயலக மேலதிக பிரதேச செயலர்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது. Read More »

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஐக்கிய அமெரிக்க அனைத்துலக மருத்துவநல அமைப்பால் புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் இயந்திரம் அன்பளிப்பு.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் இயந்திரம் ஒன்றறை ஐக்கிய அமெரிக்க அனைத்துலக மருத்துவநல அமைப்பு அன்பளிப்பாக வளங்கியுள்ளது .  இக் கையளிப்பு நிகழ்வு 21.11.2020 அன்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றது. இவ் இயந்திரம் சுமார் 5.6 மில்லியன் ரூபா பெறுமதியானது. இந் நிகழ்வில், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் அனைத்துலக மருத்துவநல அமைப்பின் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி காண்டீபன்,

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஐக்கிய அமெரிக்க அனைத்துலக மருத்துவநல அமைப்பால் புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் இயந்திரம் அன்பளிப்பு. Read More »

சுகாதார அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான துறைசார் மீளாய்வுக் கூட்டம்

2020ம் ஆண்டிடுக்கான சுகாதாரம், சுதேச மருத்துவம் மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களங்களின் துறைசார் கூட்டமானது மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் 15.09.2020 அன்று  நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. பா.செந்தில்நந்தனன் அவர்களின் தலைமையில் கீழ் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாணஆணையாளர் – சுதேச மருத்துவ திணைக்களம், மாகாணஆணையாளர் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், அனைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் வைத்திய அத்தியட்சர்கள், திட்டமிடல்

சுகாதார அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான துறைசார் மீளாய்வுக் கூட்டம் Read More »

வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி கொழும்பு ஆசிரி மருத்துவமனையில் நடைபெற்றது

வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி நெறி கொழும்பு ஆசிரி மத்திய மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று நிறைவடைந்தது. இப் பயிற்சி திட்டங்கள் மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்களுக்காக இரண்டு பிரிவுகளாக ஏற்பாடு செய்யப்பட்டன, மேலும் இப் பயிற்சியில்  மருத்துவ நிர்வாகிகள், மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை கணக்காளர்கள், திட்டமிடல் அதிகாரி, தாதிய பரிபாலகர், விடுதி சகோதரிகள், உணவு மேற்பார்வையாளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 100 க்கும்

வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி கொழும்பு ஆசிரி மருத்துவமனையில் நடைபெற்றது Read More »