சுகாதார அமைச்சு

வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலை – இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 1253 நோயாளர்களிற்குகான கண் புரை சத்திரசிகிச்சை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. மன்னார், வவுனியா முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களைச்சேர்ந்த நோயாளிகள் இம் முகாமினால் பயன் பெற்றனர். இம்முகாமானது கௌரவ வடமாகாண ஆளுநரின் வழிகாட்டலுடனும் இந்திய துணை தூதரகத்தின் பங்களிப்புடனும் நடைபெற்றது. இதற்கான முழு அனுசரனைகளையும் மலேசிய ஆலக்கா மற்றும் ஆனந்த மன்றங்கள் (Alaka and Ananda Foundation) வழங்கியதுடன் இதற்கான ஒருங்கிணைப்பினை Assist RR ( UK & SL) நிறுவனம் […]

வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலை – இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம் Read More »

வட மாகாண வைத்தியசாலைகளிற்கு தாதியர் நியமனம்

தாதிய டிப்ளேமா பயிற்சி நெறியைப்பூர்த்திசெய்தவர்களிற்கான தாதிய நியமனங்கள் வகுப்பு 3 தரம் 0II ற்கு கடந்த 22 மற்றும் 27.11.2023 ந் திகதிகளில் சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு வடமாகாண சுகாதார திணைக்களத்தில் இடப்பெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து நியமனங்களை வழங்கி வைத்தனர். இந் நிகழ்;வின்போது வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.

வட மாகாண வைத்தியசாலைகளிற்கு தாதியர் நியமனம் Read More »

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

யாழ் பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் பயிற்சி நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர் பயிற்சியை நெறியை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பயிலுநர்களிற்கான இலச்சினை அணிவிக்கும் வைபவம் கடந்த வியாழக்கிழமை 21.11.2023ம் திகதி அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, வடக்கு மாகாண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு Read More »

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி

கண்டாவளை பிரதேச செயலக சிறு தொழில் முயற்சிப்பிரிவு உத்தியோகத்தரினால் மூலிகைக் கிராமம் கல்மடுநகரில் கடந்த 21.09.2023 ந் திகதியன்று காலை 9.00 மணியளவில் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி ஒழுங்கமைக்கப்பட்டது. இவ் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறியானது வளவாளரான திரு.ச.நிரோசன் அவர்களினால் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பயிற்சி நெறியில் தேன் மற்றும் தேனீக்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள், தேனீக்கள் கூட்டத்தில் உள்ள தேனீக்கள் பற்றிய அறிமுகம் அவற்றின் வாழ்க்கை வட்டம், தேனீ வளர்ப்பின் போது கவனத்தில்

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி Read More »

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாரம்பரிய உணவு பழக்கவழக்கம் தொடர்பான இறுவெட்டிற்குரிய உணவு தயாரிப்பு

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாடசாலை சமூகத்தினிடையே பாரம்பரிய உணவு மற்றும் அவற்றின் தயாரிப்பு முறை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமானது Food & Agriculture Organization of United Nation இன் அனுசரனையுடன் செய்முறை காட்சிப்படுத்தல் ஒன்றினை தயாரித்து வருகின்றது. அதில் தமிழர்களின் பாரம்பரிய உணவு, சிற்றுண்டி மற்றும் பானங்கள் தொடர்பான செய்முறைகளுடன் கூடிய விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனை தயாரித்து பாடசாலைகளிற்கு வழங்குவதன்

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாரம்பரிய உணவு பழக்கவழக்கம் தொடர்பான இறுவெட்டிற்குரிய உணவு தயாரிப்பு Read More »

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று நடைபெற்றது. மதியம் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் புதிய கட்டடமானது வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா Read More »

பரிகாரி இதழ் – II இறுவட்டு வெளியீடு

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் இரண்டாவது இதழ் பரிகாரி – II இறுவட்டானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்டது. இதனை வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்கள் வெளியிட்டு வைத்ததுடன் வருகை தந்திருந்த அதிதிகள் சிலரிற்கும் இறுவட்டு வழங்கப்பட்டது.

பரிகாரி இதழ் – II இறுவட்டு வெளியீடு Read More »

நடமாடும் சேவை – வட மாகாணம் ஆயுர்வேத வைத்திய சபை – சுகாதார அமைச்சு

ஆயுர்வேத வைத்திய சபையினால் வடக்கு மாகாணத்தில் நடமாடும் சேவையானது நடாத்தப்பட்டது. பதிவு செய்த வைத்தியர்கள் மற்றும் பதிவினை எதிர்பார்த்துள்ளவர்களிற்கான சேவைகளை வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நடமாடும் சேவையானது வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் முறையே 18.07.2023, 19.07.2023 (கிளிநொச்சி, மன்னார்), 20.07.2023 ந் திகதிகளில் நடைபெற்றது. இந் நடமாடும் சேவையை வடக்கு மாகாணத்தில் நடாத்துவதற்கு ஏற்ற சகல ஒழுங்குகளையும் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமானது மேற்கொண்டிருந்தது. இச் சேவையில் 1.

நடமாடும் சேவை – வட மாகாணம் ஆயுர்வேத வைத்திய சபை – சுகாதார அமைச்சு Read More »

வவுனியாவில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து வவுனியா மாவட்டத்தில் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 29.07.2023ந் திகதி 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் கௌரவ இந்தியத் துணைத்தூதுவர், வடமாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர், வடமாகாண சுதேச மருத்துவ ஆணையாளர், வடமாகாண சுதேச மருத்துவ பிரதி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர், பாடசாலை அதிபர்

வவுனியாவில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது Read More »

அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலை கையளிப்பு

உடுவில் பிரதேச செயலர் பிரிவு தாவடி தெற்கில் அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலையானது திருமதி. ஆனந்தவல்லி குடும்பத்தினர் மற்றும் இராமலிங்கம் குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு சுதேச மருத்துவ திணைக்களத்திற்க்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வானது கடந்த 28.06.2023 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இந் நிகழ்வானது காலை 10.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகி நினைவுக்கல் மற்றும் அமரர் சுப்பையா இராமலிங்கம்; அவர்களின் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி. எஸ். மோகநாதன் (செயலாளர்,

அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலை கையளிப்பு Read More »