கல்வி அமைச்சு

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளகப் பூப்பந்தாட்டத்திடல் திறப்பு விழா

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் அமைக்கப்பட்ட உள்ளக பூப்பந்தாட்டத் திடல் திறப்பு விழா கடந்த 27.08.2023 ஆம் திகதி வியாழக்கிழமை வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் தலைமையில் காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும் கௌரவ விருந்தினராக கல்வி அமைச்சின் […]

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளகப் பூப்பந்தாட்டத்திடல் திறப்பு விழா Read More »

வடமாகாண ஆடிப்பிறப்பு விழா 2023

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஆடிப்பிறப்பு விழாவானது 2023.07.17 (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் சரஸ்வதி சிலை முன்றலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாணப் பிரதம செயலாளர் திரு.சமன் பந்துலசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை, தெல்லிப்பளை துர்க்கா

வடமாகாண ஆடிப்பிறப்பு விழா 2023 Read More »

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கிரிக்கெட் போட்டி

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக வடமாகாண மற்றும் வடமத்திய மாகாண இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ வு-20 கிரிக்கெட் போட்டி 12.02.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம்இ வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த போட்டி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த போட்டிக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்து

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கிரிக்கெட் போட்டி Read More »

சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை -2023

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை 2023.01.29 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் பி.ப 4.30மணி வரை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் இடம்பெற்றது. இப்பயிற்சிப்பட்டறையானது இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம், சிறுவர்

சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை -2023 Read More »

அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சித்திட்டம் – 2023

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சித்திட்டமானது 2023.01.30 திங்கட்கிழமை காலை 8.30மணி தொடக்கம் பி.ப 4.30மணி வரை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் நடத்தப்பட்டது. இப்பயிற்சிப்பட்டறையானது இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்கள் ஆன்மீகம், பண்பு, அறம், ஒழுக்கம் போன்றவை எமது வாழ்வில்

அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சித்திட்டம் – 2023 Read More »

மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப் பட்டறை – 2023

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்திய மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப்பட்டறை 2023.01.24 செவ்வாய்க்கிழமை காலை 8.30மணி தொடக்கம் பி.ப 3.30மணி வரை நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் நடத்தப்பட்டது. இப்பயிற்சிப்பட்டறையானது இறை வணக்கத்தைத் தொடர்ந்து திருமதி.மாணிக்கசர்மா ஆனந்தலக்சுமி அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சி.ரமணராஜா அவர்களினால்

மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப் பட்டறை – 2023 Read More »

வடமாகாண தைப்பொங்கல் விழா – 2023

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வவுனியா பிரதேச செயலகம் ஆகியன கிடாச்சூரி கண்ணகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துடன் இணைந்து நடத்திய தைப்பொங்கல் விழா 17.01.2023 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் கிடாச்சூரி கண்ணகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,

வடமாகாண தைப்பொங்கல் விழா – 2023 Read More »

ஒளி விழா– 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய வட மாகாண ஒளி விழாவானது 2022.12.26 (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30மணியளவில் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய மண்டபத்தில் அருட்பணி J.B அன்ரனிதாஸ் (பங்குத்தந்தை, புனித பேதுறு பாவிலு ஆலயம், நவாலி) அவர்களின் இறையாசியுடன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,

ஒளி விழா– 2022 Read More »

அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் விருத்தி மேம்பாட்டுப் பயிற்சித்திட்டம்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களது கற்பித்தல் திறனை மேம்படுத்தும் பயிற்சித்திட்டமானது 2022.11.26(சனிக்கிழமை), 2022.11.27(ஞாயிற்றுக்கிழமை) ஆம் திகதிகளில் முறையே வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. வவுனியா, மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு வவுனியா நகரசபை மண்டபத்திலும் மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் மயிலூரான் மண்டபத்திலும் காலை 9.00மணி தொடக்கம் பி.ப

அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் விருத்தி மேம்பாட்டுப் பயிற்சித்திட்டம். Read More »

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 29.10.2022 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் யா/நெல்லியடி மத்திய கல்லூரி கந்தையா நடேசு (தெணியான்) அரங்கில் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் அவர்களின் தலைமையில், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் ஒழுங்கமைப்பில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2022 Read More »