npc2018z

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆளுநரைச் சந்தித்தார்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்போர்ன் காஸ்ட்டேசேதர் அவர்கள்  வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (07) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆளுநரைச் சந்தித்தார் Read More »

வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய ஆளுநர் பணிப்பு

வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் விடுத்துள்ளார்.  இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும், கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி மற்றும் இடம் தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு (2019.03.04) முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு

வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய ஆளுநர் பணிப்பு Read More »

வடக்கு மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க அரச அலுவலர்கள் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஆளுநரின் செயலாளர்

போரிலிருந்து மீண்டுவந்திருக்கும் மாகாணமாக வட மாகாணம் காணப்படுவதால் இங்குள்ள மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க வட மாகாணத்தின் அரச அலுவலர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென வட மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்கள் வட மாகாணத்தின் அரச அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 04 பெப்பிரவரி 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற 71ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஆளுநர் செயலக பணிக்குழாம் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

வடக்கு மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க அரச அலுவலர்கள் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஆளுநரின் செயலாளர் Read More »

ஆளுநரின் சுதந்திரதின வாழ்த்து செய்தி

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள். காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது எமது மண்ணிற்கு பெருமையே ஆனாலும் அரசியல் பொருளாதார கலாசார சமூக சுதந்திரத்தினை அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ளும் வரையிலும் எமது பயணமானது தொடரவேண்டும். அதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதியும் ஏனையவர்களும் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள். அமைதியாக அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்! கலாநிதி சுரேன் ராகவன், ஆளுநர்,வட மாகாணம்.

ஆளுநரின் சுதந்திரதின வாழ்த்து செய்தி Read More »

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிப்பு

வடக்கு மாகாணம் மற்றும் நாடு முழுவதும் உருளைக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபடும்  விவசாயிகளின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் விளைச்சல் காலத்தில் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியினை அதிகரிக்கக்கோரி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தார். ஆளுநர் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைய உடனடியாகவே உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியினை 20 ரூபாவிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்குமாறு விவசாய அமைச்சர் பி.ஹரிசன் அவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள்

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிப்பு Read More »

வடக்கு ஆளுநருக்கும் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இலங்கை அரசின் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பு  31 ஜனவரி 2019 அன்று கொழும்பபிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுவதால் அது அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கியுள்ளதனை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள், நிரல் அமைச்சுக்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து

வடக்கு ஆளுநருக்கும் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு Read More »

வடக்கு ஆளுநருக்கும் பா.உ அங்கஜன் இராமநாதனுக்குமிடையில் சந்திப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அமைப்பாளருமான அங்கஜன் ராமநாதன் அவர்களுக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 30 ஜனவரி 2019 அன்று  ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

வடக்கு ஆளுநருக்கும் பா.உ அங்கஜன் இராமநாதனுக்குமிடையில் சந்திப்பு Read More »

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் தினம்

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் :பொதுமக்கள் தினம்” வடக்கு மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்களின் நேரடிப் பங்குபற்றலுடன் இன்று முற்பகல் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அமைச்சு செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மாணவர்களிடம் கையளிப்பு

இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ்பாணத்தின் பல பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்களை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு 2019 ஜனவரி 28ஆம் திகதி இடம்பெற்றது. நாவற்குழி மகாவித்தியாலயத்திலும் டிறிபேர்க் கல்லூரியிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்கள், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷில்பக் அம்புலே அவர்களாலும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களாலும் மாணவர்களிடம் கையளிக்கட்டது.

புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மாணவர்களிடம் கையளிப்பு Read More »

இரணைமடுகுள விவசாய சம்மேளனத்தினருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

புதிய விவசாய காப்புறுதி தொடர்பில் ஆளுநர் அவதானம் கிளிநொச்சிக்கு 27 ஜனவரி 2019 அன்று நண்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இரணைமடுக்குள விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் வடக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களினதும் விவசாயிகள் பொறியியலாளர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி அமையப்போகும் குழு தொடர்பிலும் விவசாயிகளுடன் இதன்போது ஆராயப்பட்டது. கிளிநொச்சி, இரணைமடு மற்றும் இரணைமடு

இரணைமடுகுள விவசாய சம்மேளனத்தினருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »