npc2018z

பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை ஆளுநர் சந்தித்தார்

வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கும் விஜயம் ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை 15 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் சந்தித்தார். அஸ்கிரிய விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரர் அவர்களை சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் மல்வத்து விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க […]

பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை ஆளுநர் சந்தித்தார் Read More »

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என்ற உண்மையினை கண்டறிய வட மாகாண ஆளுநர் நியமித்த உண்மையை கண்டறியும் குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதன் அவர்களால் ஆளுநரிடம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களும் இதன்போது உடனிருந்தார்.

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு Read More »

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அவர்களுக்கும்  வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 13 பெப்பிரவரி 2019 அன்று  பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வட மாகாணத்தில் நிலவும் காணி, வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. வட மாகாணத்தில்  பாதுகாப்பு படைகளிடமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் விவசாயப் பண்ணைகள் ஜனாதிபதி  அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவின்  பேரில் படிப்படியாக பொதுமக்களிடம்

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

வட மாகாண ஆளுநர் தலைமையில் 21 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு

வடமாகாணத்தில் சுகாதார சேவையை விஸ்தரிப்பதன் மூலம் மக்கள் நலன்களை மேம்படுத்தும்  நோக்கோடு  சுகாதார அமைச்சினால் 21 அம்புலன்ஸ் வண்டிகள் வடமாகாண சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கைதடி முதலமைச்சர் அலுவலகத்தில் 13 பெப்பிரவரி 2019 அன்று  இடம்பெற்றது. குறித்த 21 அம்புலன்ஸ் வண்டிகளும் யாழ்ப்பாணம் (9), கிளிநொச்சி (4) , வவுனியா (2) , முல்லைத்தீவு (2) மற்றும் மன்னார் (4) ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த

வட மாகாண ஆளுநர் தலைமையில் 21 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு Read More »

வட மாகாண ஆளுநர் – இந்திய கல்வித்தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் பெப்பிரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் 13 பெப்பிரவரி 2018 அன்று கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதன் காரணமாக கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்குதுணைபுரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார். இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகபீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை

வட மாகாண ஆளுநர் – இந்திய கல்வித்தூதுக்குழுவினர் சந்திப்பு Read More »

வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு  அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க வட வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். மூன்று பேரடங்கிய இந்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார். இதேவேளை வட மாகாணத்தின் கல்வித்துறையை

வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு Read More »

வடக்கு மாகாண மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் காணப்படும் நீர் வளங்களை முகாமைத்துவம் செய்து வட மாகாணத்தில் காணப்படும் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு பொதுவானதும் உறுதியானது நிரந்தரத் தீர்வொன்றினை காணுவதனை நோக்காகக் கொண்டு ஆளுநர் அவர்களின் ஆலோசனையின் பேரில் அமையப் பெற்றுள்ள மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு வட மாகாண ஆளுநரின்  தலைமையில் 07 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »

பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (07) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதனடிப்படையில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த 39.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் அவற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான 21.24 ஏக்கர் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் உரிமையாளர்களிடம் கௌரவ ஆளுநர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.  

பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாணத்தின் மொழிப்பிரச்சினை தொடர்பில் ஆராய ஆளுநரால் குழுவொன்று நியமனம்

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின்      சிரேஷ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண

வடக்கு மாகாணத்தின் மொழிப்பிரச்சினை தொடர்பில் ஆராய ஆளுநரால் குழுவொன்று நியமனம் Read More »