யாழ்ப்பாணம், வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார அவர்களின் கோரிக்கைக்கு இணங்க, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (05.08.2026) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. கலந்துரையாடல் தொடர்பில் அமைச்சர் இ.சந்திரசேகர் […]
