July 18, 2026

முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தர பதவியுயர்வு நியமனங்கள், வருமான வரிப் பரிசோதகர்கள், மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

‘நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில் […]

முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தர பதவியுயர்வு நியமனங்கள், வருமான வரிப் பரிசோதகர்கள், மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆடிப்பிறப்புப் பெருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன், இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆடிப்பிறப்புப் பெருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. Read More »