May 20, 2026

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய எதிர்ச் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வாங்கினரிடம் கௌரவ ஆளுநர் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கமைவாகத் தமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீர் மற்றும் நகர்ப்புற அபிவிருத்திப் பணிப்பாளர் மனோஜ் சர்மா, பணிப்பாளர் சபையின் ஆலோசகர் மொன் வான் டெர் வ்லியட் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிமனையின் […]

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய எதிர்ச் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வாங்கினரிடம் கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

புதிதாக நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் அவர்களும், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச்

பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. Read More »

எமது மாகாண இளைஞர் ஒருவர் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். – கௌரவ ஆளுநர்

எல்லா வகையான விவசாய உற்பத்திப் பொருட்களிலும் இரசாயனங்கள் மற்றும் அசேதனப் பதார்த்தங்கள் கலந்து உலகளாவிய ரீதியில் அதன் விளைவான பாதிப்புக்கள் அதிகரித்துச் செல்லும் தற்போதைய சூழலில், எமது மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விவசாயத் திணைக்களத்தின் பங்களிப்புடன் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். வடக்கு மாகாண மக்கள் சார்பில் அவரைப் பாராட்டுவதுடன், அவரின் தொடர் முயற்சிகளுக்கு எமது மாகாண நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என வடக்கு மாகாண

எமது மாகாண இளைஞர் ஒருவர் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். – கௌரவ ஆளுநர் Read More »